Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

ஆந்திரத்தில் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

ஆந்திர மாநிலத்தில் சுமார் 75லட்சம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் 5 வயது வரையிலான குழந்தை களுக்கு முதல்கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இதில் ஆந்திர மாநிலத்தில் தாய்-சேய் நலத்துறை சார்பில் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்துகள் விநியோகிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x