Published : 21 Mar 2017 09:57 AM
Last Updated : 21 Mar 2017 09:57 AM

பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் முகமது ஷமி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேசம் அலகாபாத் அருகேயுள்ள மவ்அய்மா பகுதியை சேர்ந்தவர் முகமது ஷமி. சமாஜ்வாதி கட்சியில் 20 ஆண்டுகள் இருந்த அவர் அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜில் இணைந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x