Published : 14 Jan 2014 03:32 PM
Last Updated : 14 Jan 2014 03:32 PM

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ரத்து செய்யும் ஆம் ஆத்மி முடிவுக்கு கண்டனம்

டெல்லியில் மல்டிபிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முந்தைய காங்கிரஸ் அரசின் உத்தரவை திரும்பப் பெற ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது பொறுப்பற்ற முடிவு என மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா விமர்சனம்.

டெல்லியில் மல்டிபிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை அமல்படுத்துவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசில் வழங்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

ஆனந்த் சர்மா எதிர்ப்பு: ஆம் ஆத்மியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா: "கொள்கை முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு இந்தியா ஒன்றும் வளர்ச்சியடையாத குடியாட்சி அல்ல. ஆம் ஆத்மியின் முடிவு பொறுப்பற்றத் தன்மையை உணர்த்துகிறது. மைனாரிட்டி அரசான ஆம் ஆத்மி அவசர கதியில் இந்த முடிவை எடுத்துள்ளது. இது போன்ற முடிவுகளை நிலையான ஆட்சி செலுத்தும் எந்த அரசும் எடுக்காது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x