

பிரதமர் நரேந்திர மோடியை ராணுவத் தளபதி தல்பீர் சிங், விமானப் படை தளபதி அரூப் ராஹா, கடற்படை துணை தளபதி கே.பி.சிங் ஆகியோர் சந்தித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் யூரி பகுதியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடனான பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால், இது வழக்கமான சந்திப்புதான் என பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. மாதந்தோறும் பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிப்பது வழக்கம். அதுபோலவே இம்முறையும் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. விமானப் படை தளபதி ஊரில் இல்லாததால் அவருக்குப் பதிலாக துணை தளபதி கலந்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யூரி தாக்குதலுக்குப் பின்னர் ராணுவத் தளபதி பிரதமர் மோடியையும், பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் பலமுறை சந்தித்துவிட்டதால் இது வழக்கமான சந்திப்பு என ராணுவ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.