Published : 13 Jun 2016 08:59 AM
Last Updated : 13 Jun 2016 08:59 AM
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி முன்னணி கடந்த மே 25-ம் தேதி பதவியேற்றது. இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநாடு திருவனந்த புரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை களில் நடைபெற்றது.
மாநாடு நிறைவையொட்டி கட்சியின் மாநில பொதுச்செயலா ளர் கொடியேறி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கேரள அமைச்சர்கள் அனை வரும் வாரத்தில் 5 நாட்கள் கண்டிப் பாக அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். பொதுமேடைகளில் தேவையற்ற வார்த்தைகளைப் பேசக்கூடாது. குறிப்பாக தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது.
தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT