Published : 03 Dec 2013 12:53 PM
Last Updated : 03 Dec 2013 12:53 PM

370-வது பிரிவை மோடியால் நீக்க முடியாது: பரூக் அப்துல்லா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை, நரேந்திர மோடி 10 முறை பிரதமரானாலும் நீக்க முடியாது என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர் அமர்சிங் வீட்டில் வைத்து இந்தியா-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பேரிய பரூக் அப்துல்லா: "370-வது பிரிவு குறித்து விவாதிக்க வேண்டும் என மோடி கூறியிருக்கிறார், ஆனால் பா.ஜ.க இதுவரை எந்த விவாதத்திலும் ஈடுபட்டதில்லை, எனவே 10 முறை பிரதமர் பதவியில் இருந்தாலும் அவர்களால் 370-வது சட்டத்தை ரத்து செய்ய முடியாது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x