Published : 21 Jun 2016 09:09 AM
Last Updated : 21 Jun 2016 09:09 AM
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில நாட்கள் பயணமாக வெளிநாடு செல்லப் போவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “குறுகிய கால பயணமாக சில நாட்களுக்கு வெளிநாடு செல்கிறேன். எனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்” என்று கூறி யுள்ளார். ஆனால் எந்த நாட்டுக்கு செல்கிறார் என்று அவர் தெரிவிக்கவில்லை.
ராகுல் காந்தி தனது 46-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இப்பிறந்த நாளில் அவர் காங்கிரஸ் தலைவ ராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஓய்வுக்காக 56 நாட்கள் ரகசியப் பயணம் சென்றது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற் படுத்தியது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அவர் வெளிநாடு சென்றதை ஆளும் பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் அறிவிக்கப்பட்டார். அவர் விரைவில் கட்சித் தலைவராக பதவி உயர்த்தப்படுவார் என கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT