Published : 30 Nov 2013 06:07 PM
Last Updated : 30 Nov 2013 06:07 PM

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

டீசல் விலையை அரசே நிர்ணயிப்பது என்கிற கட்டுப்பாடு 6 மாதத்தில் விலக்கிக்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கடந்த 20- ஆம் தேதியன்று கூறியிருந்தார். 6 மாதத்தில் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்கள் வசம் சென்று விடும் எனவும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறையும் போது 6 மாதத்தில் டீசல் விலையில் ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x