Published : 12 Mar 2017 10:32 AM
Last Updated : 12 Mar 2017 10:32 AM

வளர்ச்சிக்கு மக்கள் முடிசூட்டி உள்ளனர்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி

தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, மக்கள் வளர்ச்சிக்கு முடி சூட்டி உள்ளது தெரியவந்துள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்து உள் ளார்.

உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக அமோக வெற்றி பெற் றது. இதையடுத்து, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண் டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண் டாடினர். ஹைதராபாத், விஜய வாடா, திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் பாஜகவினர் கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஏலூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “உத்தரப் பிரதேசம், உத்தராகண்டில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் வளர்ச்சிக்கு மக்கள் முடிசூட்டி உள்ளனர்” என்றார்.

இதுபோல தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x