Published : 15 Apr 2017 10:12 AM
Last Updated : 15 Apr 2017 10:12 AM
கர்நாடகா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜக 5 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாஜக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதர 5 தொகுதிகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கைப்பற்றி யுள்ளன. இந்த வெற்றி சரிசம மானது. ஆனால் பாஜக தனது தோல்வியை மறைத்து வெற்றி யைக் கொண்டாடுகிறது.
மத்தியபிரதேசத்தில் ஆளும் பாஜக, அடர் தொகுதியை காங்கிர ஸிடம் இழந்திருக்கிறது. இதுதான் உண்மையான தலைப்புச் செய்தி யாக இருந்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT