Last Updated : 03 Feb, 2017 10:17 AM

 

Published : 03 Feb 2017 10:17 AM
Last Updated : 03 Feb 2017 10:17 AM

ரியல் எஸ்டேட் அனுமதி தொடர்பான மனு: சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு என்ஜிடி கூடுதல் அவகாசம்

ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அனுமதி பெறத் தேவையில்லை என்ற அறிவிக்கைக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக ஆவணங் களைத் தாக்கல் செய்ய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.

இது தொடர்பான கூடுதல் ஆவணங்களை வரும் 7-ம் தேதி தாக்கல் செய்யுமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு என்ஜிடி தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீது 15-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட் டது. அதில், அனைத்து அளவி லான கட்டிடம் மற்றும் கட்டுமான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சுற்றுச் சூழல் முன் அனுமதி பெறுவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்குமாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் உட்பட பலர் என்ஜிடியில் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு என்ஜிடி உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சகத்தின் சார்பில் 2 வாரம் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், 7-ம் தேதி வரை அவ காசம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x