Last Updated : 30 Oct, 2014 11:38 AM

 

Published : 30 Oct 2014 11:38 AM
Last Updated : 30 Oct 2014 11:38 AM

எஸ்எம்எஸ் மூலம் செய்தி: தமிழிலும் இலவச சேவை அறிமுகம்

அகில இந்திய வானொலி மையம் சார்பில், செய்திகளை எஸ்எம்எஸ் மூலம் இலவசமாக வழங்கும் திட்டம் தமிழ் உட்பட மேலும் நான்கு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலி நிலையம் ஏற்கெனவே ஆங்கிலம், இந்தி, மராத்தி, சம்ஸ்கிருதம், டோக்ரி, நேபாளி மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் செய்திகள் வழங்கும் சேவையை இலவசமாக அளித்து வருகிறது. இச்சேவை கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்பட்டது.

முக்கிய செய்திகளை சந்தாதாரர்களுக்கு, அவர்கள் மொழியிலேயே மொபைல் மூலம் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது, இத்திட்டம் அசாமி, குஜராத்தி, தமிழ், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இச்சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x