6-வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

6-வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated on
1 min read

புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்றுவரும் கலவரங்களால் தொடர்ந்து 6-வது நாளாக அங்கு இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஸ்ரீநகர், வடக்கு காஷ்மீர், தெற்கு காஷ்மீரின் 4 மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்காக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரிவினைவாதிகள் நடத்தும் முழுஅடைப்புப் போராட்டங்களாலும் இயல்பு நிலை முடங்கியுள்ளது. கடைகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், பெட்ரோல் பங்குகள் மூடியுள்ளன.

பொது போக்குவரத்து 6 நாட்களாக இயங்கவே இல்லை. ஒருசில இடங்களில் தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் சொற்பமான அளவிலேயே இயக்கப்படுகிறது.

திருமண நிகழ்வுகள் ரத்தாகி வருகின்றன. செய்தித்தாள்களில் நாள்தோறும் திருமண ரத்து விளம்பரங்கள் குவிந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in