Published : 08 Oct 2014 12:19 PM
Last Updated : 08 Oct 2014 12:19 PM

ஆந்திராவில் 5 ஆண்டுகளில் 100% கல்வி அறிவு: சந்திரபாபு நாயுடு விருப்பம்

ஆந்திர மாநிலத்தில் வரும் 5 ஆண்டுகளுக்குள் 100 சதவீதம் கல்வி அறிவு ஏற்பட வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், நாகுல பாளையம் பகுதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ‘பள்ளி அழைக்கிறது’ என்ற திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசிய தாவது:

மாநிலத்தில் கல்வி அறிவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ‘பள்ளி அழைக்கிறது’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 14 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 100 சதவீதம் கல்வி அறிவு ஏற்பட வேண்டும்.

வறட்சி மாவட்டமான அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருவது நமக்கு பெருமையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஆதலால் அனைவரும் கல்வி கற்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x