Last Updated : 15 Jul, 2016 09:50 AM

 

Published : 15 Jul 2016 09:50 AM
Last Updated : 15 Jul 2016 09:50 AM

தெற்கு சூடானில் இருந்து 146 இந்தியர்கள் மீட்பு

உள்நாட்டுப் போர் காரணமாக தெற்கு சூடானில் சிக்கி தவித்த இந்தியர்களில் 146-க்கும் மேற் பட்டோர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். இவர்கள் விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைவார்கள்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இந்தியர்களை மீட்பதற்காக தெற்கு சூடான் தலைநகர் ஜுபா சென்றடைந்த மத்திய வெளி யுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டெங் அலோர் குவோல் மற்றும் துணை அதிபர் ஜேம்ஸ் வானி இகா ஆகியோரை சந்தித்தார். பின்னர் அங்கிருந்த இந்தியர்கள் 2 விமானங்களில் ஏற்றப்பட்டனர். அந்த விமானங்கள் உகாண்டாவின் என்டிபி நகருக்கு சென்று எரிபொருள் நிரப்பிக் கொண்டு தாயகம் திரும்பியது” என்றார்.

இதில் ஒரு விமானத்தில் 146 பேர் இருந்தனர். மற்றொரு விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற விவரம் தெரிய வில்லை. மேலும் நாடு திரும்பு வதாக ஏற்கெனவே பதிவு செய்து கொண்ட பலர், வர மறுத்து விட்ட தாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x