Last Updated : 07 Oct, 2014 11:40 AM

 

Published : 07 Oct 2014 11:40 AM
Last Updated : 07 Oct 2014 11:40 AM

மேகாலயாவில் நிலச்சரிவு: காரில் சென்றவர் பலி

மேகாலயாவில் ரி-போய் மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.

மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பிரதேசத்தில் உள்ள வீடுகள் பலவும் சரிந்து விழுந்தன. நிலச்சரிவின்போது அந்த வழியே சென்ற கார், வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி முழுவதுமாக புதைந்தது. இதில் காரில் சென்ற நபர் ஒருவர் பலியானார்.

இதில், சுமார் 100 மீட்டர் தொலைவுள்ள சாலை இந்த நிலச்சரிவில் சேதமடைந்துள்ளது. 7 வாகனங்கள், எண்ணெய் டேங்கரும் நிலச்சரிவில் சிக்கின. இந்த மோசமான பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வீடுகளை இழுந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x