Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

ம.பி. தேர்தலில் 6 லட்சம் “நோட்டா” பதிவு

மத்தியப்பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், அதாவது 1.9 சதவீதம் பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டா (நன் ஆஃப் த எபவ்) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

மாநில முதன்மை தேர்தல் அலுவலகம் அளித்துள்ள தகவலின்படி, இம்மாநிலத்தில் 2,633 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 144 வாக்காளர்கள் நோட்டா வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 66 லட்சத்து 31,759 பேர். இதில் 3 கோடியே 38 லட்சத்து 49,550 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டா வசதியை சிந்துவாரா மாவட்டத்தில் அதிகபட்சம் 39,235 பேரும், குறைந்தபட்சமாக பிந்து மாவட்டத்தில் 3,378 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x