Published : 14 Sep 2016 10:34 AM
Last Updated : 14 Sep 2016 10:34 AM

கர்நாடகாவுக்கு ஆந்திர அரசு பஸ்கள் குறைப்பு

காவிரி பிரச்சினை காரணமாக போராட்டம் தீவிரமடைந்துள்ள தால், கர்நாடகாவுக்கு இயக்கப் படும் ஆந்திர அரசு போக்குவரத்து பஸ்கள் நேற்று முதல் குறைக்கப் பட்டன.

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட பஸ்கள், லாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட வாக னங்கள் கொளுத்தப்பட்டன. இதை யடுத்து பெங்களூரு, மைசூரு நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநி லத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசு பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என போக்குவரத்து அதிகாரிகள் கருதி னர். இதன் காரணமாக, அதிகாரிகள் பெங்களூரு சென்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முதல் கர்நாடகாவுக்கு செல்லும் ஆந்திர அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தினமும் ஆந்திராவில் இருந்து கர்நாடகாவுக்கு 430 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இப்போது 190 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x