Published : 15 Oct 2014 03:32 PM
Last Updated : 15 Oct 2014 03:32 PM
மகாராஷ்டிரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாக்களித்தனர்.
பிற்பகலில் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்களித்தார் மாநிலங்களவை எம்.பி.யும், கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர். பின்னர் அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் "நான் வாக்களித்துவிட்டேன், நீங்கள் வாக்களித்திருப்பீர்கள் என நம்புகிறேன்" என பதிவு செய்திருந்தார்.
மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் 1,699 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 4,119 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் தரப்பில் 287 பேரும், பாஜக தரப்பில் 280 பேர், சிவசேனா தரப்பில் 282 பேர், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் 278 பேர், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தரப்பில் 219 பேர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பாஜக-சிவசேனைக் கூட்டணியும் முறிந்ததால் நான்கு கட்சிகளும் தனித் தனியே களம் இறங்கியுள்ளன. இந்த நான்கு கட்சிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்கப் போராடுவதால் இங்கு நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT