Last Updated : 25 Jun, 2016 09:35 AM

 

Published : 25 Jun 2016 09:35 AM
Last Updated : 25 Jun 2016 09:35 AM

தானே சிறை கைதிகள் சார்பில் புதிதாக எப்எம் ரேடியோ சேவை: அமிதாப் விரைவில் தொடங்கி வைக்கிறார்

மகாராஷ்டிரா மாநிலம், தானே மத்திய சிறைச்சாலையில் யோகா பயிற்சி நிறைவு செய்த 29 கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது, சிறையில் கைதி களை தொகுப்பாளர்களாகக் கொண்டு, பிரத்யேகமான எஃப்எம் ரேடியோ சேவை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் ஷிண்டேவிடம், சிறை கண்காணிப்பாளர் ஹிரலால் ஜாதவ் தெரிவித்தார்.

சிறை வளாகத்தில் ரேடியோ நிலையம் அமைப்பதற்கான இடத்தையும் ஷிண்டே ஆய்வு செய்தார். முற்றிலும் சிறைக் கைதிகளைக் கொண்டு தொகுக் கப்படும் நிகழ்ச்சிகள் சிறையில் மட்டுமல்லாது, நகரில் மற்ற பகுதிகளிலும் ஒலிபரப்பாகும்.

இப்புதிய ரேடியோ சேவையை நடிகர் அமிதாப் பச்சன், ஓரிரு வாரங்களில் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x