Last Updated : 28 Oct, 2014 06:21 PM

 

Published : 28 Oct 2014 06:21 PM
Last Updated : 28 Oct 2014 06:21 PM

கருப்புப் பணம் பதுக்கியோரின் முழுப்பட்டியலும் தாக்கல் செய்யப்படும்: அருண் ஜேட்லி

வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் முழு விபரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருக்கும் அனைவரது விபரங்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி, சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் கருப்புப் பண நபர்கள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் பகிரப்படும்” என்றார்.

முன்னதாக உச்ச நீதிமன்றம், வெளிநாட்டில் கருப்புப் பணம் வைத்திருக்கும் அனைவரது பெயர்களையும் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றிய விவரங்களை வெளியிடுவதில் சிக்கல்கள் இருப்பதாக முன்பு அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அதாவது இரு நாடுகளிடையே இது குறித்து செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி பெயர்களை வெளியிட முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x