அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து: 50 பயணிகள் காயம்; 19 பேர் கவலைக்கிடம்

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து: 50 பயணிகள் காயம்; 19 பேர் கவலைக்கிடம்
Updated on
1 min read

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் 50 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

திமாபுர் - காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில், டெகிரியா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயில் தடம்புரண்டது. இன்ஜினும், 10 பெட்டிகளும் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த மார்க்கத்தில் செல்லும் திப்ருகார் - ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட 8-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in