Published : 05 Jan 2017 09:54 AM
Last Updated : 05 Jan 2017 09:54 AM
மணிப்பூரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் துணை ராணுவப் படையான அசாம் ரைபில்ஸ் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். சிவிலியன் ஒருவர் காயம் அடைந்தார்.
மணிப்பூரின் உக்ருல் மாவட்டம், குந்தக் என்ற கிராமத்தில் அசாம் ரைபில்ஸ் படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அசாம் ரைபில்ஸ் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பூபால் சிங் (42) என்ற வீரர் உயிரிழந்தார். மேலும் சிவிலியன் ஒருவர் காயம் அடைந்தார்.
வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியபோதிலும், தீவிரவாதிகள் மலைப்பாங்கான அப்பகுதியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தப்பி விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT