Published : 11 Nov 2013 10:46 AM
Last Updated : 11 Nov 2013 10:46 AM

கோல்கத்தாவில் கமிஷனர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

கோல்கத்தாவில், ஷார்ட் தெருவில் கமிஷனர் வீட்டருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள், 4 பேர் காயமடைந்தனர்.

கோல்கத்தா ஷார்ட தெருவில் உள்ள காலி நிலத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். 4 பேர் காயங்களுடன் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நிலம், சொத்து தகராறு சர்ச்சையில் இருப்பதாக தெரிகிறது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ஒரு பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் அருகே, போலீஸ் கமிஷனர் வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x