Published : 12 Jun 2017 08:09 AM
Last Updated : 12 Jun 2017 08:09 AM

விவசாய கடன்கள் தள்ளுபடி: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

குறு, சிறு, நடுத்தர விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 11 நாட்கள் நீடித்த விவசாயிகள் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களை நியாயமான விலையில் மாநில அரசு கொள்முதல் செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மகாராஷ்டிரா விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக மும்பை, நாசிக் உள்ளிட்ட நகரங்களின் முக் கிய சந்தைகள் வெறிச்சோடின. பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில் சிவசேனா கட்சி விவசாயிகளின் போராட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.

இதனிடையே கிசான் கிராந்தி மோர்ச்சா, அகில பாரதிய கிசான் சபா உட்பட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறிய போது, “வரலாற்று சிறப்புமிக்க முடிவு விரைவில் அறிவிக்கப் படும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மூத்த அமைச்சர்களுடன் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, குறு, சிறு, நடுத்தர விவசாயி களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது. உடனடியாக விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றன.

இதுதொடர்பாக அகில பாரதிய கிசான் சபா தலைவர் அஜித் நவாலே கூறியபோது, “அரசின் முடிவை வரவேற்கிறோம். எங் களது போராட்டத்தை வரும் ஜூலை 26-ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளோம். அதற்குள் விவ சாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசின் முடிவின் படி சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 1.07 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது. எனினும் கடன் தள்ளுபடி மாநில அரசுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x