Published : 29 Sep 2013 10:22 AM
Last Updated : 29 Sep 2013 10:22 AM

கடனுக்காக அலைக்கழிக்காதீர்: வங்கிகளுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

வங்கி மேலாண்மை இயக்குனர் ஆர்.கே.துபே தலைமை தாங்கினார். மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் உதவி தொகை வழங்குவது வங்கிகளின் கடமை. கல்வி கடன் பெற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளை அணுக, மாணவர்கள் அச்சப்பட்டனர்.

சொத்து ஜாமின் மற்றும் பெரிய நபர்கள் ஜாமின் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும். இப்போது எந்த ஜாமினும் இல்லாமல் கடன் வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டம் வழிவகை செய்கிறது. அதன் மூலமாக எளிதாக கடன் பெற முடிகிறது. வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை வங்கி அதிகாரிகள் அலைகழிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

6,600 மாணவர்களுக்கு ரூ.131 கோடி கல்வி கடன், 1,000 பேருக்கு ரூ.25 கோடி விவசாய மற்றும் சுய உதவி குழு கடன், 2004 பேருக்கு ரூ.46 கோடி நுண் மற்றும் சிறு தொழில் கடன் என்று மொத்தம் 18,600 பேருக்கு ரூ.202 கோடி கடன் தொகைக்கான ஆணையை ப.சிதம்பரம் வழங்கினார்.

செயல் இயக்குனர் ஆர்.கே.குப்தா, சென்னை வட்ட பொது மேலாளர் ஆர்.எம்.மீனாட்சிசுந்தரம், கிருஷ்ணசாமி எம்.பி. உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x