காஷ்மீரில் புதையுண்ட 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

காஷ்மீரில் புதையுண்ட 5 ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு
Updated on
1 min read

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது.

இந்த ராணுவச் சாவடிக்கு செல்லும் பனிப்பாதை நேற்று காலை திடீரென உடைந்து உள்வாங்கியதில் 5 ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். இதையடுத்து தகவலின் பேரில் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர். பனிப் பொழிவுடன் கூடிய மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்புப்பணி நடைபெற்றது. இதில் சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு 5 வீரர்களையும் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். பிறகு இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக கடந்த புதன்கிழமை முதல் 15 ராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in