Last Updated : 26 Jul, 2016 05:26 PM

 

Published : 26 Jul 2016 05:26 PM
Last Updated : 26 Jul 2016 05:26 PM

கேஜ்ரிவால் முன்னாள் முதன்மைச் செயலருக்கு ஜாமீன்

ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இன்று சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் ரூ.1 லட்சம் பிணையில் ராஜேந்திர குமாரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

ஆனால் ராஜேந்திர குமார் வழக்கு தொடர்பான சாட்சிகளை சந்திக்கக்கூடாது என்று கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

அரசு ஒப்பந்தங்களை வழங்கும் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ராஜேந்திர குமார் சாதகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழ ராஜேந்திர குஅமர் மற்றும் 4 பேரை சிபிஐ கடந்த ஜூலை 4-ம் தேதி கைது செய்தது.

ராஜேந்திர குமார் உட்பட, கேஜ்ரிவால் அலுவலகத்தின் முன்னாள் உதவி செயலர் தருண் சர்மா, ராஜேந்திர குமாருக்கு நெருக்கமாகக் கருதப்படும் அசோக் குமார், நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கவுஷிக் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இண்டெலிஜெண்ட் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம் இந்தியா லிட் நிறுவனத்தின் கவுஷிக்குக்கு முந்தைய நிர்வாக இயக்குநர் ஜி.கே.நந்தா, எண்டவர் சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் குமார் குப்தா, சக உரிமையாளர் சந்தீப் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குப்தா, சர்மா, அசோக் குமார், கவுஷிக் ஆகியோரும் கோர்ட்டில் ஜாமீன் மனு செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இவர்கள் கைது செய்யப்பட்டது டெல்லியில் அரசியல் புயலைக் கிளப்பியது. டெல்லி அரசை மத்திய அரசு பழிவாங்குகிறது, ஆட்சியை முடக்குகிறது என்று ஆம் ஆத்மி மத்திய அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x