Last Updated : 16 Oct, 2014 12:15 PM

 

Published : 16 Oct 2014 12:15 PM
Last Updated : 16 Oct 2014 12:15 PM

உத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

உத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

உத்திரப் பிரதேசம் ஃபரூக்காபாத்-கஸ்கங் இடையே சென்ற சரக்கு ரயில்களின் 11 பெட்டிகளும் 2 என்ஜின்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

பெட்டிகள் அனைத்திலும் உரங்கள் இருந்ததாகவும், சரக்கு ரயில் பிஹார் சென்றடைய வேண்டியது என்றும் வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் பாதையை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து அந்த மார்க்கத்தில் சென்ற ஃபரூக்காபாத்-கஸ்கங் விரைவு ரயில், கான்ப்பூர் பயணிகள் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x