Last Updated : 24 Feb, 2017 09:44 AM

 

Published : 24 Feb 2017 09:44 AM
Last Updated : 24 Feb 2017 09:44 AM

பிரதமர் தொகுதியில் ராகுல், அகிலேஷ் 27-ம் தேதி பிரச்சாரம்

பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் வரும் 27-ம் தேதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இவ்விரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் இதற்கான ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, எந்தெந்த பகுதியில் இரு தலைவர்களும் வீதிவீதி யாக சென்று பிரச்சாரம் மேற் கொள்வார்கள் என்பது குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்று மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சதிஷ் ராய் தெரிவித்துள்ளார்.

இதுபோல பாஜகவும் இப் பகுதியில் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளது. மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, வாரணாசிக்கு விரைந்துள்ளார்.

வாரணாசி பகுதியில் கடைசி கட்டமாக மார்ச் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமரின் தொகுதி என்பதால் வாரணாசி மீது அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது நாட்டு மக்களின் பார்வையும் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x