Published : 22 Feb 2014 01:12 PM
Last Updated : 22 Feb 2014 01:12 PM

மர்ம நபர்களால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சருக்கு அறுவை சிகிச்சை

ஒடிசா மாநிலம் சுற்றுலா மட்டும் கலாச்சார அமைச்சர் மகேஸ்வர் மொஹாந்தி மர்ம நபர்களால் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு அவர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மஹேஸ்வர் மொஹாந்தி வெள்ளிக்கிழமை இரவு புரியில் இருக்கும் அவரது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது விலா எலும்புக்கு இடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருக்கிறார்.

மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்த முதல்வர் நவீன் பட்நாயக், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x