Published : 20 Sep 2016 05:10 PM
Last Updated : 20 Sep 2016 05:10 PM

காஷ்மீர் யூரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் யூரி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவச் செய்தித் தொடர்பாளர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, யூரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதாவது துப்பாக்கிச் சத்தம் 20 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் அதன் பிறகு முழு அமைதி நிலவியதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x