Published : 11 Mar 2017 11:22 AM
Last Updated : 11 Mar 2017 11:22 AM
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறும் நிலையில் மோடி அலையே வெற்றிக்குக் காரணம் என்று உ.பி.பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உ.பி. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பாஜக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைக் குழு கூடி விரைவில் முடிவெடுக்கும் என்று கூறினர்.
உ.பி. பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “இது மோடி அலைதான். 2014 மக்களவைத் தேர்தலில் தொடங்கிய மோடி அலை 2017-லும் நீடிக்கிறது. இது 2019 லோக்சபா தேர்தல்கள் வரை நீடிக்கும்” என்றார்.
கட்சியின் பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வார்கியா கூறும்போது “இதன் பெருமை பிரதமர் மோடியையேச் சேரும், பாஜக-வின் ஏழைகள் சார்புக் கொள்கைகள் மற்றும் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் ஆகியவை இந்த வெற்றி முகத்தை தேடித் தந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT