Last Updated : 15 Aug, 2016 09:09 AM

 

Published : 15 Aug 2016 09:09 AM
Last Updated : 15 Aug 2016 09:09 AM

சத்தீஸ்கர் கோசாலையில் 22 பசுக்கள் பலி

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் கோசாலையில் உரிய பராமரிப்பின்றி, 22க்கும் அதிகமான பசுக்கள் இறந்தன.

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் மாநில அரசு நிதியுதவியுடன் இயங்கி வரும் இந்த கோசாலையில், போதிய தீவனம் இல்லாமலும், பராமரிப்பு செய்யப்படாமலும் பசுக்கள் இறந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, வேளாண் அமைச்சர் பிரிஜி மோகன் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், கடந்த 4 மாதங்களாக இந்த கோசாலையில் பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்காததால், 200-க்கும் அதிகமான பசுக்கள் இறந்ததாக, முன்னாள் முதல்வரும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x