Published : 07 Jan 2014 10:00 AM
Last Updated : 07 Jan 2014 10:00 AM

இஸ்ரோ தலைவர் திருப்பதியில் தரிசனம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திங்கள் கிழமை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

முன்னதாக திருமலைக்கு வந்த அவரை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் வரவேற்று, சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

பின்னர் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தரிசனத்துக்கு பின்னர் வெளியே வந்த ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசுகை யில், "ஜி.எஸ்.எல்.வி. - டி5ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் வகை யில், ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x