Published : 02 Mar 2017 10:16 AM
Last Updated : 02 Mar 2017 10:16 AM
ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் மட்டும் இப்போது சட்ட மேலவைகள் செயல்பட்டு வருகின்றன. இதற் கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக்கு இப்போது உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்நிலையில், சட்ட மேலவைத் தேர்தலில் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இதைத் தடுக்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் போல இந்தத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் செல வுக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கண் காணிப்பு அமைப்பு சமீபத்தில் கோரிக்கை வைத்தது.
மேலும் சம்பந்தப்பட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவு உச்சவரம்பு தொகையில் பாதி தொகையை நிர்ணயிக்கலாம் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, சட்ட மேலவைகள் செயல்பாட்டில் உள்ள 7 மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க வேண்டும் என்று மத்திய அரசு சட்ட அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முகமையாக சட்ட அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT