Last Updated : 03 Jan, 2017 09:17 AM

 

Published : 03 Jan 2017 09:17 AM
Last Updated : 03 Jan 2017 09:17 AM

கர்நாடகாவில் தொடரும் அரசியல் படுகொலைகள்: மண்டியாவில் மஜத பிரமுகர் கொலையால் பதற்றம்

கர்நாடக மாநிலம் மண்டியாவில் நேற்று முன்தினம் மஜத பிரமுகர் கொல்லப்பட்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக் காலம் அடுத்த ஆண்டில் நிறைவடை கிறது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வரு கின்றன. இந்நிலையில் கர்நாடகா வில் அரசியல் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 3 மாதத்தில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு ஆகிய இடங் களில் ஆர்எஸ்எஸ் மற்றம் பாஜக பிரமுகர்கள் 5 பேர் கொல்லப்பட் டுள்ளனர். இவ்வழக்குகளில் இஸ் லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர மண்டியா மாவட்டத் தில் கடந்த ஒரு மாதமாக மதசார் பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நால்வர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மண்டியா மாவட்டத்தில் முருகனஹள்ளி யைச் சேர்ந்த மஜத பிரமுகர் ஹரீஷ் (32) நேற்று முன்தினம் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிர முகர்கள் ரக்்ஷித் (25), யோகேஷ் (28) ஆகிய இருவரும் ஹரீஷை கொலை செய்தது தெரியவந்ததது.

இதனால் ஆத்திரம் அடைந்த மஜதவினர் கொலையாளிகளின் வீட்டை அடித்து நொறுக்கி, 4 வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

அப்போது போலீஸார் குவிக்கப் பட்டு காங்கிரஸாருக்கும், மஜத வினருக்கும் இடையே மோதலை தடுத்தனர். தலைமறைவாக இருந்த ரக்்ஷித், யோகேஷ் இரு வரையும் நேற்று கைது செய்தனர். மண்டியாவில் இரு கட்சியினரி டையே எப்போதும் மோதல் ஏற்படும் நிலை காணப்படுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டியா மாவட்ட மஜத தலைவரும், எம்எல்ஏவுமான புட்டனையா நேற்று கூறும்போது, “மண்டியா வில் மஜத பிரமுகர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் வரும் தேர்தலில் மண்டி யாவை கைப்பற்ற காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளது. இந்த கொலை களுக்கு நியாயம் கேட்டு மண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை மஜத சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” 'என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x