Last Updated : 17 Mar, 2017 05:52 PM

 

Published : 17 Mar 2017 05:52 PM
Last Updated : 17 Mar 2017 05:52 PM

உத்தராகண்ட் முதல்வராகிறார் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் திரிவேந்தர சிங் ராவத்

உத்தராகண்ட் மாநில முதல்வராக பாஜகவின் திரிவேந்தர சிங் ராவத் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு வயது 56.

திரிவேந்தர சிங் ராவத் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னாள் பிரச்சாரகர் ஆவர்.

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பாஜக காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் உத்தராகண்ட்டின் 9-வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி ஏற்கவுள்ளார்.

உத்தராகண்ட் மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள் திரிவேந்திர சிங் ராவத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்.

முன்னதாக, உத்தராகண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x