திருப்பதியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம்

திருப்பதியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம்
Updated on
1 min read

திருப்பதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த பரிசீ லனை செய்யும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஸ்ரீதரனை, ஆந்திர அரசு, மெட்ரோ ரயில் திட்ட முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீதரன், ஆந்திர முதல்வருடன் திங்கள்கிழமைஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுடன் திருப்பதி யிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த சாத்திய கூறுகள் இருந்தால், அதனை பரிசீலிக்கும்படி ஸ்ரீதரனை முதல்வர் சந்திரபாயு நாயுடு கேட்டுக்கொண்டார்.

இதனால் விரைவில் இதற்காக இடம் ஆய்வு செய்யும் பணி நடைபெறும் என தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in