

இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய ஏவுகணைகளை பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஒ) உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இஸ் ரேல் கூட்டுறவுடன் அணு ஆயுதங் களைச் சுமந்தபடி எதிரிகளின் வான்வழித் தாக்குதலை இடை மறித்து தாக்கும் திறன் படைத்த ‘பராக் 8’ ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தரையில் இருந்து வானில் உள்ள இலக்கு களை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த மற்றொரு நீண்ட தூர அதிநவீன ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட் டது. இந்த ஏவுகணையும் இஸ்ரேல் கூட்டுறவுடன் உருவாக்கப்பட்டுள் ளது. இந்த ஏவுகணை நேற்று இரு முறை சோதிக்கப்பட்டது.