நீதிபதிகள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
Updated on
1 min read

நீதிபதிகள் நியமன நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வலியுறுத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த நீதித்துறை அலுவலர்களின் முதல் மாநாட்டில் பங்கேற்றபோது அவர் பேசிய தாவது:

நாடு முழுவதும் 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகளே பணி யாற்றும் நிலை உள்ளது. இதனால் நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. எனவே நீதித் துறையின் செயல்பாட்டை வேகப் படுத்த காலியாகவுள்ள நீதிபதி கள் பதவி களை நிரப்பும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in