Last Updated : 28 Jun, 2019 07:16 PM

 

Published : 28 Jun 2019 07:16 PM
Last Updated : 28 Jun 2019 07:16 PM

தமிழகத்தில் பசுமை விமானநிலையம் அமைக்க மாநிலங்களவையில் அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் கோரிக்கை

தமிழகத்தில் சென்னையில் சர்வதேச பசுமை விமானநிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இன்று இதை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன் கேள்வி நேரத்தில் எழுப்பினார்.

 

இது குறித்து முத்துக்கருப்பன் மாநிலங்களவையில் பேசியதாவது: நாட்டின் அதிகப்பயணிகள் பயன்படுத்தும் நான்காவது பெரிய சர்வதேச விமானநிலையம் சென்னையில் அமைந்துள்ளது. இதனால், சர்வதேசப் பயணிகள் மற்றும் கார்கோ சேவையின் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருவதால் அங்கு ஒரு சர்வதேசப் பசுமை விமானநிலையத்தின் தேவை உள்ளது.

 

இதன் அவசியம் குறித்து தமிழக முதல்வரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். சென்னை விமானநிலயத்தின் பயணிகள் எண்ணிக்கை விரைவில் 23 மில்லியனை தொட உள்ளது. சென்னையில் மற்றொரு விமானநிலையம் அமைக்க இடத்தையும் தமிழக அரசு அளிக்க முன்வந்துள்ளது.

 

சென்னை ஒரு சர்வதேச நாடுகளில் இருந்து மருத்துவ தேவைக்காக வரும் முக்கிய நகரமாக மாறி வருகிறது. இங்கு கூடுதலாக விமான சேவைகளை அதிகரிப்பது தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களுக்கும் அதிக பலன் தரும்.

 

சென்னையில் மற்றொரு விமானநிலையத்தை விரைவில் அமைப்பதால் தமிழகத்திற்கும் நம் நாட்டிற்கும் பொருளாதார ரீதியாகவும் பலனை அளிக்கும். எனவே, சென்னையில் சர்வதேசப் பசுமை விமானநிலையத்தை மத்திய,மாநில அரசுகளின் சமமான பங்கீடில் அமைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x