Published : 28 Jun 2019 08:14 AM
Last Updated : 28 Jun 2019 08:14 AM

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லும். எனினும் அந்த சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நியாயமில்லை. அரசு வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் கல்வியில் 13 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் மராத்தா சமுதாயத் தினர் 33 சதவீதம் பேர் உள்ளனர். அந்த சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதன்பயனாக, கடந்த ஆண்டு நவம்பரில் மராத்தா சமுதாயத் தினருக்கு 16 சதவீத இடஒதுக் கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் ரஞ்சித், பாரதி தங்கர் அமர்வு வழக்குகளை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

"உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை, அத்தியாவசிய தேவையுள்ள சூழ்நிலைகளில் உயர்த்திக் கொள்ளலாம். அதன்படி மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும். எனினும் அந்த சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கியி ருப்பது நியாயமில்லை.

பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம் பரிந்துரை செய்தபடி மராத்தா சமுதாயத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 12 சதவீதமும் கல்வி யில் 13 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x