Published : 12 Sep 2018 08:33 AM
Last Updated : 12 Sep 2018 08:33 AM

ஆயுள் தண்டனையை குறைக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆசாராம் பாபு கருணை மனு

சிறுமி பாலியல் பலாத்கார வழக் கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபு தண்டனையைக் குறைக்க ராஜஸ்தான் ஆளு நருக்கு கருணை மனு அனுப்பி யுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள ஆசிரமத்தில் சாமி யார் ஆசாராம் பாபு கடந்த 2013-ம் ஆண்டு தன்னைப் பாலியல் பலாத் காரம் செய்ததாக 16 வயது சிறுமி போலீஸில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் ஆசாராம் பாபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டு, கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறையில் அடைக் கப்பட்ட ஆசாரம் பாபு, தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2-ம் தேதி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனது வயது முதிர்வை கருத்தில்கொண்டு ஆயுள் தண்டனையைக் குறைக் குமாறு ராஜஸ்தான் ஆளுநருக்கு ஆசாராம் பாபு கருணை மனு அனுப்பி உள்ளார். இதன் மீது அறிக்கை அளிக்குமாறு மாநில அரசின் உள்துறைக்கு அந்த மனுவை ஆளுநர் அனுப்பி வைத் துள்ளார். அது ஜோத்பூர் மத் திய சிறை நிர்வாகத்துக்கு அனுப் பப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸிடம் இருந்து அறிக்கை பெற்ற பிறகு, அதை சிறைத்துறை இயக்குநர் ஜென ரலுக்கு அனுப்பி வைப்போம் என்று ஜோத்பூர் மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x