Published : 28 Sep 2018 08:14 AM
Last Updated : 28 Sep 2018 08:14 AM
ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை உதவியுடன் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட 57 பேருக்கு ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.
இதையடுத்து, இவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், “இந்த ஆண்டில் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் இருந்து ஒரு முறை விலக்கு அளிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.
இந்த மனுவை பரிசீலித்த நீதி மன்றம், இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலை அணுகுமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், மனுதாரர் கள் சுகாதார அமைச்சகம், மருத்துவ கவுன்சில் மற்றும் சில எம்.பி.க்களை (அன்வர் ராஜா, பி.ஆர்.சுந்தரம்) அணுகினர். இதையடுத்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
இதுகுறித்து ஏ.ஜே. அறக் கட்டளை இயக்குநர் ஏ.நஜீருல் அமீன் கூறும்போது, “டெல்லி உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கியது. இவர் களுக்கு 2018-ம் கல்வி ஆண்டில் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க ஒரு முறை மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT