Published : 19 Sep 2018 02:12 PM
Last Updated : 19 Sep 2018 02:12 PM

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி இந்தியா வருகை

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கன் - இந்தியா  இருதரப்பு உறவு மற்றும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய வந்தடைந்தார்.

இன்று (புதன்கிழமை) புதுடெல்லி விமானம் நிலையம் வந்தடைந்த அஷ்ரப் கானியை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை  சந்தித்துப் பேச இருக்கிறார் கானி.

இந்தச் சந்திப்பில் இரு நாட்டின் பரஸ்பர உறவுகள், பிராந்தியப் பாதுகாப்பு, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை, ஆப்கனில் உள்கட்டமைப்புகளில் இந்தியாவின் பங்கு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்ப்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அஷ்ரப் கலந்து கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x