Published : 19 Sep 2018 09:40 AM
Last Updated : 19 Sep 2018 09:40 AM
டெல்லி தலைமைச் செயலாளரை தாக்கிய வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 11 எம்எல்ஏக்கள் ஆஜராக டெல்லி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இரவு அந்த மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்றார்.
அப்போது தலைமைச் செயலாளரை, எம்எல்ஏக்கள் அமானுதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 11 எம்எல்ஏக்கள் வரும் அக்டோபர் 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT