Published : 29 Sep 2014 11:38 AM
Last Updated : 29 Sep 2014 11:38 AM
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கக் கோரி நேற்று தர்ணாவில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து, ஜெயலலிதா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சிறை அமைந்துள்ள பகுதியில் நேற்று குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக வினரிடம் போலீஸார் கூறும்போது, “பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையைச் சுற்றி 5 கி.மீ.சுற்றளவிற்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தனர்.
இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலைந்து சென்றதால் சிறை வளாக நுழைவு வாயிலுக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது. இதனை அறிந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறைச் சாலையை முற்றுகையிட்டனர். அப்போது, “அம்மாவை விடுதலை செய்யுங் கள்” என கோஷம் எழுப்பினர்.
அதிமுகவினர் மீது தடியடி
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அதிமுக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத் தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே போலீஸார் அவர்களை தடியடி நடத்தி களைத்தனர். இதனால் பலருக்கு கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூர் மாநகர ஆணையர் எம்.என்.ரெட்டி கூறும்போது, “கடந்த 2 நாட்களாக பெங்களூரில் தங்கியிருந்த அதிமுகவினரில் பெரும்பாலானோர் வெளியேறி விட்டனர். இருப்பினும் தமிழர் கள் வசிக்கக்கூடிய சிவாஜி நகர், அல்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக் கும் வகையில் யாராவது நடந்துகொண்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT