Published : 06 Sep 2018 08:28 AM
Last Updated : 06 Sep 2018 08:28 AM
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கென பல்வேறு கட்டுப் பாடுகளைத் தேர்தல் ஆணை யம் விதித்துள்ளது. இதன்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடப் பட்டது முதல் தேர்தல் முடிவு வெளியாகும் வரையிலான காலத் தில், பிரச்சாரத்துக்காக வாகனங் களில் பொருத்தப்பட்ட ஒலிப் பெருக்கிகளை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தேர்தல் ஆணை யம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கி களை பயன்படுத்துவதற்கான நேரத்தை நீட்டிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத் திருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறும்போது, “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடமாடும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் பிரச் சாரம் செய்வதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் மற்ற கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT