Last Updated : 24 Sep, 2018 05:25 PM

 

Published : 24 Sep 2018 05:25 PM
Last Updated : 24 Sep 2018 05:25 PM

பிஹாரில் முன்னாள் மேயர் சுட்டுக்கொலை; ஓட்டுநரும் பலியான பரிதாபம்

பிஹாரின் முஸாஃபர் நகரின் முன்னாள் மேயர் சமீர் குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அவர் பயணித்த காரை ஓட்டிய ரோஹித் குமாரும் (40) கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமீர் குமார் (50) கடந்த 2002 முதல் 2007 வரை முஸாஃபர் நகர் மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய முஸாஃபர்நகர் டிஎஸ்பி முகுல் ரஞ்சன், ''கொலை சம்பவம் தீயணைப்புப் படை அலுவலகம் அருகே மாலை 7 மணியளவில் நடந்துள்ளது.

ஏகே 47 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அதிநவீன ரகத் துப்பாக்கியைக் கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொலையாளிகள் சுமார் 17 முதல் 18 சுற்றுகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்'' என்றார்.

முன்னதாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்ட தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவை ஞாயிற்றுக்கிழமை அன்று மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x